முதல் முத்தம் :
எதுவும் அறியா உலகில் அனைத்துமாய் நானிருப்பேன் என்றது தாயின் முதல் முத்தம்....
வழி அறியாப் பயணத்தின் வழிகாட்டியாய் நானிருப்பேன் என்றது தந்தையின் முதல் முத்தம்....
நிரந்தரமற்ற உலகில் நிழல்போல் நானிருப்பேன் என்றது வாழ்க்கைத்துணையின் முதல் முத்தம்....
வாழ்வின் ஒட்டு மொத்த மகிழ்வையும் ஒரே நொடியில் தொட்டுக் காட்டியது குழந்தையின் முதல் முத்தம்..
No comments:
Post a Comment